ஞாயிறு, 26 ஜூன், 2011

இந்திய இறையாண்மை

அட்டூழியங்களை பகிரங்கமாக நடத்த இந்திய அரசு கையில் வைத்திருக்கும் லைசென்ஸ்.

ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கள்ள நோட்டு அடிபவர்களுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

நம்மை துன்புருத்தும் பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கருப்புப் பணம் பதுக்குவோரின் கணக்குகளை முடக்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

போதைப்பொருள் விற்போருக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொலைகுற்றத்திற்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

பாலியல் குற்றம் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனை, கசையடி - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொள்ளை, திருட்டு குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

ராகிங் குற்றம் புரிவோருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

மனித நேயமே இல்லாமல் சித்திரவதி செய்து கொல்லும் அரக்கர்களை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும், தண்டனை வழங்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

யாரேனும் ஊழலுக்கு எதிராக அமைதியாக உண்ணாவிரதம் இருந்தாலோ,
குரல் கொடுத்தாலோ தடியடி நடத்தி, விரட்டி அடித்து, மீண்டும் நடக்காமல் இருக்க பாடம் புகட்ட வேண்டும்.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

யாரேனும் அவர்கள் வாழ்ந்த மண்ணிற்காக போராடினாலோ, ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தாலோ, துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

விஜயகாந்த் ஒரு வல்லரசு 'இந்தியா அல்ல'

(http://geethappriyan.blogspot.com ல் சேனல்4 தொடர்பான பதிவில் ஒரு அனானியின் கருத்துரை)

புதன், 22 ஜூன், 2011

இணையதள புரட்சி

கூகிள் மூலம் இனி நாம் இணையதளத்திலிருந்து ஆங்கிலம் தமிழ் நேரடியாக மொழிபெயர்க்க முடியும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன். போன வாரம் கூட இந்த வசதி இல்லாமல் போனது.

இனி விக்கியிலிருந்து பல தகவல்களை எளிதாக தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்கமுடியும் உதாரனத்திற்க்கு மருத்துவம் போன்ற சிக்கலான விஷயங்களை சாமானிய நபர் கூட தெரிந்து கொள்ள இயலும்.

ஆனால் பதிவர்களிடையே சோம்பேறித்தனத்தை உருவாக்கும் (திரைப்படங்களையோ இல்லை வேறேது சிந்தனைகளையோ அடுத்தவர் இடத்திலிருந்து copy செய்து வெளியிடுவார்கள்) சுய சிந்தனை இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எதாவது போட்டாகவேண்டும் என்று விகடனிலிருந்து copy paste செய்பவர்கள் இங்கே அதிகம்.

புதன், 1 ஜூன், 2011

இப்படியும் வாழ்த்துறாங்க

5 Short Lessons of Life

1. Once, all villagers decided to pray for rain, on the day of prayer all the People gathered but only one boy came with an umbrella…

THAT’S FAITH

2. When you throw a baby in the air, she laughs because she knows you will catch her…

THAT’S TRUST

3. Every night we go to bed, without any assurance of being alive the next Morning but still we set the alarms in our watch to wake up…

THAT’S HOPE

4. We plan big things for tomorrow in spite of zero knowledge of the future or having any certainty of uncertainties. ..

THAT’S CONFIDENCE

5. We see every one is suffering because of a certain creature. We know there is every possibility of same or similar things happening to us. But still we get married

THAT’S OVER CONFIDENCE!!

புதன், 9 மார்ச், 2011

காதல்

காதல்...!!
எத்தனைமுறை உச்சரித்தாலும்
இனிக்கும்...

இனிப்பு..
உணர்கிறேன் நாவில் அல்ல, மனதில்..
உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம்...!!

உச்சரித்தேன்,
நான் பிறக்கும்போது ‘அம்மா’ வென்று..
நீ என் பெயரை கூறுகையில் மறுபடியும் பிறக்கிறேன்.

பிறப்பு..
அடுத்த ஜென்மத்தில் நான் எங்ஙனம் பிறந்தாலும்
நீ மட்டும் நீயாகவே தோன்றவேண்டும்.

தோற்றம்..
எனக்கு உன்னைக் கண்டபின்பு - நீ விட்டு விலகியதில்
அனுதினம் சந்திக்கிறேன் மரணம்..!!

மரணம்..
நடந்தபின்பு என்ன நடக்கும் ?
அறிய எல்லோர்க்கும் உயிரோடிருக்கும்போதே ஆசை..!!

ஆசை..
பலப்பல.. ஆளுக்கொன்றாக.. அவற்றை அடையவே
வாழ்கின்றோம் வாழ்க்கை..!!

வாழ்க்கை..
இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது
எல்லோருடைய பலநாள் கனவு..!!

கனவு..
எனக்கு கோட்டையல்ல எப்போதுமே
அது மிகச்சிறிய அழகான குடிசை..

குடிசை..
எரிந்தது உன்னால், பிரச்சினையில்லை - இனி
அழகாய் தெரியும் நிலா..!!

நிலா..
உன்னைவிட அழகு
என்று அன்று நான் சொன்னது பொய்..

பொய்..
.............................
இதற்கு விளக்கம் தேவையில்லை

தேவையில்லை..
என்று நீ கூறிய ஓர் சொல் என்னுள்
ஏற்படுத்தியது ஆறாத காயம்..!!

காயம்..!!
இதற்க்கு சாதிக்கத் தெரிந்தது
ஒன்று மட்டுமே - அதன் பெயர் வலி..

வலி..
நபருக்கு வித்தியாசப்பட்டாலும்
ஆறாமல் விட்டுச்செல்லும் ரணம் என்கிற நினைவுகளை..!!

நினைவுகள் ..
மட்டுமே வாழ்கையை நடத்தினாலும்
சில சமயம் இல்லாமல் போவது நல்லது...!!

நல்லது..
இருவரும் பிரிவது.. !!
என்றதில் தடுமாறி நின்றது என் மனம்..!!

மனம்..
உன்னுடையதாக இருப்பின் - அதை என்னால் இப்பவும்
புரிந்துகொள்ள முடிவதில்லை..!!

இல்லை..
என ஆகிவிட்டது என் வாழ்க்கை
இனி அவரவர் கையில் முடிவு ..!!

முடிவு..
நன்றாகவே அமைந்தது உனக்கு
நானோ தேடிக்கொண்டிருக்கிறேன் என் காதலை..

காதல்...???

சனி, 26 பிப்ரவரி, 2011

வருத்தம்

வருந்தத் தக்க
காரியத்தை நீ செய்ததால்
வருத்தப்பட்டு நிற்பது நான்தான்.

பாதிக்கப்பட்டது நான்தான்
என்பதாலோ என்னவோ..
என்னால் வருந்தத்தக்கப்படும்
நபர் நீ தான் என்பதை நான் குறிப்பிடுவதும்
சற்றே வருத்தப்படவேண்டிய விஷயம் தான்.

உனக்கே - நீ என்னால் விரும்பப்படும் நபர் என்று
தெரிந்தும்கூட என்னை கவனியாமல் சென்றதில் கூட
எனக்கு சற்றே வருத்தம் தான்.

டிஸ்கி:
நான் என்ன சொல்றேன்னு எனக்கே புரியாமல் போவது கூட
எனக்கு வருத்தம் தான்.

முடிவு என்பது எப்பவும் இல்லை..!!!

நான் நடந்தவற்றை மறக்கவில்லை..
என் மனதின் தூண்டுதலில் நடந்தன என்பதை நான் மறுக்கவுமில்லை..

என் காதல் உன் மனதை கரைக்கவுமில்லை..
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு உரைக்கவுமில்லை..

மூடி வைத்த காதல் நெஞ்சம் விட்டு இறக்கவில்லை..
முடிந்து போன காதல் கண்டு நான் இறக்கவுமில்லை..

நீ இல்லாத வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை..
மீண்டும் நீ வரக்கூடும் என்பதால் இதை முடிக்கவுமில்லை..

இப்படியும் நடக்காதா

நீ எனைப்பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கூற
என் வீட்டு வாசலில்
அதிகாலையே பூச்செண்டோடு கால் கடுக்க
காத்துக்கிடந்தாய் - நான் கவனிக்கத்தவறிவிட்டேன்.

ஏதேச்சையாக வாசல் பார்த்தபோது
என் வாழ்வின் வசந்தம் நிற்பதைப் பார்த்து
பதறிப்போனேன்.

உன் அருகில் நான் வந்தபோது,
உன் விழிகளில்
உற்சாகம் பிறக்கவில்லை - மாறாக
உணர்ச்சிவசப்பட்டு உன் கண்களில் நீர் வழிந்தது

நீ கொடுத்த பூக்கள் மிகவும் பிடித்திருந்தது.
நான் நன்றாக உணர்வேன்
உலகில் மிகவும் கடினமான காரியம்
உயிருக்குயிரானவருக்கு பிடித்த பரிசை
தேர்வு செய்வதுதான் என்பதை..

என் சித்தம் சிலாகித்தது
நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று

சாதாரணமான விஷயத்திற்காக
இவ்வளவு சிரமப்படவேண்டுமா என்று
உன்னை கடிந்து கொண்டேன்.

ஏதேதோ சமாதானம் செய்தேன் - நீ
அழுகையை நிறுத்துவதாய் இல்லை.
நான் தான் இருக்கேனடா... என்றபடியே
உன் முகத்தினை என் நெஞ்சோடு புதைத்துக்கொண்டேன்
நீ லேசாக புன்னகைத்தாய்.

மேற்கொண்டு உன் மலர்ந்த முகம் பார்க்க
உன் மோவாயை உயர்த்தியபோது...

எழுந்தரிடா எருமை என்று
என் அம்மா கத்தியவுடன் தான் புரிந்து கொண்டேன்
இவ்வளவு நேரம் நடந்தது கனவு என்பதை.

....ச்சே என்ன கொடுமை சரணவன் இது ??

புண்ணியம் செய்தோர்

உன் விழிகள் என்ன மந்திர வாசலா
காண்பவரெல்லாம் காணாமல் போவதற்கு
நீ கண்டு பேசியவர்க்கெல்லாம் சொர்க்கம் கிட்டும்
பேசாதவர்கள் - புண்ணியம் செய்தவர்
அவர்கள் மீண்டுமொறுமுறை உயிர்த்து
உன்னிடம் பேச காத்து நிற்பர்.

யார் நீ

நீயாக இதயத்தைக் கொடுப்பதாய் இல்லை
நான் பிடுங்கிக்கொண்டேன்.
நீயாக என் கனவுகளைத் தருவதாய் இல்லை
நான் திருடிக்கொண்டேன்.
கள்வன் நான் தான்
கண்டித்துவிடாதே கடைசிவரை
உன்னோடு இருக்க ஆசை.

அழுமூஞ்சி இவனை கட்டிக்கொண்டு
எப்படித்தான் காலம் தள்ளப்போகிறோமோ
என்று கூட நீ எண்ணியிருக்கக்கூடும்
தவறான முடிவு எடுத்துவிட்டோமோ
என்றும் நீ தவிக்கக்கூடும்.
இருப்பினும்
எதுவானாலும் உன் விருப்பம் என்று
எப்போதோ முடிவு செய்து விட்டேன்.
ஆனால் எனக்குத்தான் பிரிய விருப்பமில்லை.

முப்பத்தியிரண்டு வருடமாக எவ்விதப்பிடிப்பும்
இன்றி - ஓர் உன்னத வாழ்க்கை
தொடங்கும் வேளையில் ஏகப்பட்ட முரண்கள்.
காணவேண்டுமென்ற ஆசை அவ்வப்போது
வந்தாலும் கடைசியாக பேசிய
‘பிடிக்கவில்லை’
என்ற ஒரு வார்த்தை குறுக்கே நிற்கிறது.

தினம் தினம் ஏதாவதொரு அன்பான வார்த்தை
வராதா என்றெல்லாம் எண்ணி - கைப்பேசியை
குழந்தைபோல் பாவிக்கிறேன்.
நீ என்னடா என்றால் உன்னை
எப்போதோ மறந்துவிட்டேன்...
யார் நீ என்கிறாய்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அதை மட்டும் திருப்பிக்கொடு


ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.


அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு


இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?


நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.


திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

என் சிரிப்பை..
--------------------------------------------
என் மனதின் இந்த வலியை உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என் நண்பர் http://kavithaikadhalan.blogspot.com/2011/02/blog-post.html வெளிக்கொனர்ந்தமைக்கு - அவருக்கு மிக்க நன்றி

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சிரிப்பு வருதா என்ன???

இது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 எடியூரப்பா

100 எடியூரப்பா = 1 ரெட்டி

100 ரெட்டி = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

********

மேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.

100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்

நன்றி - http://mazhimegam.blogspot.com/