சனி, 26 பிப்ரவரி, 2011

யார் நீ

நீயாக இதயத்தைக் கொடுப்பதாய் இல்லை
நான் பிடுங்கிக்கொண்டேன்.
நீயாக என் கனவுகளைத் தருவதாய் இல்லை
நான் திருடிக்கொண்டேன்.
கள்வன் நான் தான்
கண்டித்துவிடாதே கடைசிவரை
உன்னோடு இருக்க ஆசை.

அழுமூஞ்சி இவனை கட்டிக்கொண்டு
எப்படித்தான் காலம் தள்ளப்போகிறோமோ
என்று கூட நீ எண்ணியிருக்கக்கூடும்
தவறான முடிவு எடுத்துவிட்டோமோ
என்றும் நீ தவிக்கக்கூடும்.
இருப்பினும்
எதுவானாலும் உன் விருப்பம் என்று
எப்போதோ முடிவு செய்து விட்டேன்.
ஆனால் எனக்குத்தான் பிரிய விருப்பமில்லை.

முப்பத்தியிரண்டு வருடமாக எவ்விதப்பிடிப்பும்
இன்றி - ஓர் உன்னத வாழ்க்கை
தொடங்கும் வேளையில் ஏகப்பட்ட முரண்கள்.
காணவேண்டுமென்ற ஆசை அவ்வப்போது
வந்தாலும் கடைசியாக பேசிய
‘பிடிக்கவில்லை’
என்ற ஒரு வார்த்தை குறுக்கே நிற்கிறது.

தினம் தினம் ஏதாவதொரு அன்பான வார்த்தை
வராதா என்றெல்லாம் எண்ணி - கைப்பேசியை
குழந்தைபோல் பாவிக்கிறேன்.
நீ என்னடா என்றால் உன்னை
எப்போதோ மறந்துவிட்டேன்...
யார் நீ என்கிறாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக