சனி, 26 பிப்ரவரி, 2011

இப்படியும் நடக்காதா

நீ எனைப்பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கூற
என் வீட்டு வாசலில்
அதிகாலையே பூச்செண்டோடு கால் கடுக்க
காத்துக்கிடந்தாய் - நான் கவனிக்கத்தவறிவிட்டேன்.

ஏதேச்சையாக வாசல் பார்த்தபோது
என் வாழ்வின் வசந்தம் நிற்பதைப் பார்த்து
பதறிப்போனேன்.

உன் அருகில் நான் வந்தபோது,
உன் விழிகளில்
உற்சாகம் பிறக்கவில்லை - மாறாக
உணர்ச்சிவசப்பட்டு உன் கண்களில் நீர் வழிந்தது

நீ கொடுத்த பூக்கள் மிகவும் பிடித்திருந்தது.
நான் நன்றாக உணர்வேன்
உலகில் மிகவும் கடினமான காரியம்
உயிருக்குயிரானவருக்கு பிடித்த பரிசை
தேர்வு செய்வதுதான் என்பதை..

என் சித்தம் சிலாகித்தது
நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று

சாதாரணமான விஷயத்திற்காக
இவ்வளவு சிரமப்படவேண்டுமா என்று
உன்னை கடிந்து கொண்டேன்.

ஏதேதோ சமாதானம் செய்தேன் - நீ
அழுகையை நிறுத்துவதாய் இல்லை.
நான் தான் இருக்கேனடா... என்றபடியே
உன் முகத்தினை என் நெஞ்சோடு புதைத்துக்கொண்டேன்
நீ லேசாக புன்னகைத்தாய்.

மேற்கொண்டு உன் மலர்ந்த முகம் பார்க்க
உன் மோவாயை உயர்த்தியபோது...

எழுந்தரிடா எருமை என்று
என் அம்மா கத்தியவுடன் தான் புரிந்து கொண்டேன்
இவ்வளவு நேரம் நடந்தது கனவு என்பதை.

....ச்சே என்ன கொடுமை சரணவன் இது ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக